சோழவந்தானில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, பஜனை குழுவினர் ஊர்வலம் நடைபெற்றது.
இன்று காலை சோழவந்தான் ராவுத்த நாயக்கர் தெரு, ஸ்ரீ கொண்டல் ராவுத்தர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் பஜனை மடத்திலிருந்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடினர் அதில் காலையில் நெய்வேத்திய அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆன்மீகவாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.