• Fri. Mar 24th, 2023

அழகு குறிப்புகள்

Byவிஷா

Jul 19, 2022

சருமம் பொலிவு பெற:

1 டீ ஸ்பூன் ஏலக்காய் பவுடருடன் கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து பருக்கள் உள்ள இடத்தில் வையுங்கள். இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை பருக்களை குணப்படுத்தவும், மீண்டும் பருக்கள் வராமல் தடுக்கவும் மற்றும் பருக்களால் ஏற்பட்டுள்ள தழும்புகளை போக்கவும் உதவுகிறது. இந்த ஏலக்காய் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் இரவில் அப்ளே செய்து விடுங்கள். பிறகு சில மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை சிவந்த வலியுள்ள பருக்களை சீக்கிரமே ஆற்ற உதவுகிறது. அதே நேரத்தில் தேன் இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படும். இது உங்க சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும். இது இரத்தத்தை சுத்திகரிக்கவும், சரும அழற்சியை போக்கி சருமம் பொலிவு பெற உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *