தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு பாலமேட்டில் தொடங்கவுள்ளது. 800க்கும் மேற்பட்ட காளைகளும், 335 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், காளைக்கு பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது
மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் 335 மாடுபிடி வீரர்களும், 800க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்கவுள்ளன.
போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்படுவதோடு, போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீர்ர்களுக்கும் மருத்துவபரிசோதனை செய்யப்படும்.இந்த போட்டிக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 160பேர் கொண்ட மருத்துவக்குழுவினரும், 6 மொபைல் மருத்துவக்குழுவினர், 15 108ஆம்புலன்ஸ்கள், 60பேர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினரும், கால்நடைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டி தொடங்கிய பின்னர் ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் 45 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சுற்று நடைபெறவுள்ளது.
போட்டி தொடங்கியவுடன் முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது.
போட்டியின் முதலிடம் பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் ஒன்றும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக் ஒன்றும் முதல் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பாக வழங்கப்படவுள்ளது.பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளைக்கு அலங்காநல்லூரை சேர்ந்த பொன் குமார் சார்பில் கறவை பசு மாடு கன்றுடன் பரிசு வழங்கப்பட உள்ளது.
இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும் பைக் , தங்க காசு, லேப்டாப், குக்கர், எல்.இ.டி TV, பிரிட்ஜ், தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 1500காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.பாலேமடு ஜல்லிக்கட்டு போட்டியை பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்து கமிட்டி சார்பில் அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து சமத்துவமாக ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.
போட்டியின் போது 1கிலோமீட்டர் தூரம் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 100மீட்டர் வரை தேங்காய். நார் பரப்பபட்டுள்ளது.காளைக்கான கலெக்சன் பாயிண்டில் உடைப்பு ஏற்படாதவாறு இரண்டடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் போட்டி நடைபெறும் பாலமேடு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் காளைகள் உள்ளே விழுந்து காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கிணறுகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]
- சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் […]
- மோடி அரசுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கி காங்கிரஸ்மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை […]
- ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி […]
- கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்முகவூர் செட்டியார்பட்டி தளவாய்புரம் போன்ற பகுதிகளை சாரந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிவகாசி […]
- கன்னியாகுமரியில் பரபரப்பு…. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொட்டாரம் அரசு […]
- லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்நாகர்கோயிலில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. […]
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
- கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் உருவாக்கத்தில் கடந்த 14 வருடங்களாக படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து […]
- இரட்டை இலை சின்னம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் முடிவுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இரட்டை இலை சின்னத்தை பெற உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். […]