பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதால், ஆசிய வங்கி கடனளிக்க முன்வந்திருக்கிறது.
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. செலுத்த வேண்டிய கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகருடைய பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆசிய வளர்ச்சி வங்கியானது இந்தியாவின் மதிப்பில் சுமார் 19 ஆயிரத்து 372 கோடி ரூபாய் கடனளிக்க முன்வந்திருக்கிறது. இதில், சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது, 11,618 கோடி ரூபாயை இந்த வருடத்திலேயே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.