• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இன்று ஆலோசனை…

Byகாயத்ரி

Mar 30, 2022

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் மரணம் தொடர்பாக அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்று (மார்ச்-30) ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆணைய தரப்பு, வி.கே சசிகலா மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆகவே இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.