பொது இடங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
ஒருசிகரெட்டின் விலையை குறைந்தது ரூ22 ஆக உயர்த்தினால் மட்டுமே அதன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள் ,குழந்தைகளுக்கு இதயநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பொது இடங்களில் புகைப்பிடிப்பது தான் முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் எனவே அதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.