உலகம் முழுதும் மூன்றாவது அறை ஒமிக்ரான் வைரஸ் தொற்றுபரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு வழி பாட்டு தலங்களுக்கு வழிபட பொதுமக்களுக்கு தடை விதித்தது. நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப் ஸ்லிப் பகுதிக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து விடுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பேரில் துணை கலை இயக்குனர் கணேசன் கூறுகையில் டாப்சிலிப் பகுதியில் முன்பதிவு செய்திருந்த விடுதிகளில் செலுத்திய கட்டணம் திருப்பி செலுத்தப்படும் சனி,ஞாயிறு இரு தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.