சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு ரூ.960 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுயிருப்பதாவது:- இந்த ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டில், தொகுப்பு அணுகுமுறையில் நுண்ணீர்ப்பாசன முறையை மேம்படுத்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் தொகுப்பு அணுகுமுறையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கி, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2022-23-ம் ஆண்டில் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ.960 கோடி செலவில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியில் இருந்து இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இதுகுறித்து அரசுக்கு தோட்டகலை மேம்பாட்டு முகமையின் மேலாண்மை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஒரு துளி நீரில் அதிக பயிரீடு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.960 கோடிக்கான நிதி இலக்குக்கு, மாநில அளவிலான அனுமதி குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், அதில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.319 கோடியில் ரூ.79.75 கோடியை முதல் தவணையாக மத்திய அரசு அளித்துள்ளது. எனவே திட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசு ரூ.261 கோடியை அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து, ரூ.960 கோடிக்கான நிர்வாக அனுமதியை வழங்குவதோடு, ரூ.261 கோடிக்கான நிதி ஒப்பளிப்பு உத்தரவை பிறப்பிக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]