• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசணை கூட்டம்..,

ByPrabhu Sekar

Oct 18, 2025

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மண்ணிவாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசணை கூட்டம் மாவட்ட துணை தலைவரும் மண்ணிவாக்கம் சங்கம் தலைவர் இரா.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மண்டலத் தலைவர் எம்.அமுல்ராஜ், மாவட்ட தலைவர் எம்.இந்திரஜித், மாநில துணை தலைவர் எஸ்.உத்திரகுமார், மாநில இணை செயலாளர்கள் பி.லிங்கம், ஹாஜி மக்கா சலீம், மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட பொருளாளர் எம்.மன்சூர்அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார். அதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் இந்திரஜித் சங்க நிர்வாகிகளை அறிமுக படுத்தினார். பின்னர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் சால்வைகள் அணிவித்து பணி் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மண்ணிவாக்கம் செயலாளர் எஸ்.ஆண்டனி, பொருளாளர் டி.செந்தில், கௌரவ தலைவர்கள் ம.வே..பொன்னுசாமி, ஏ.முருகேசன், சட்ட ஆலோசகர் இரா.சேகர், எஸ்.பத்மநாபன், துணைத் தலைவர்கள் எஸ்.ராஜாதுரை, எம்.அன்வர் பாஷா, பி.சரவணன், அகிலன், துணை செயலாளர்கள் ஜி.ராஜா, எஸ்.லோகநாதன், ஆர்.பிரபு, டி.தேவகுமார், டி.கோபி, செயற்குழு உறுப்பினர் பி.ராஜா, சாமிதுரை, ஜெயபிரகாஷ், கே.ராமச்சந்திரன், சிவாஜிதின், பாண்டியன், கோவிந்தரா, பாரதி, தினேஷ், முருகேசன், டி.ஆர்.ராஜேந்திரன், லட்சுமணன், பகுதி செயலாளர்கள் தினேஷ், ஆறுமுகம், கண்ணன், சந்திரன், எல்லப்பன், கணேசன், பரமதயாளன், இளைஞர் அணி விமல், எம்.குமரன், சரவணன், தினேஷ், ராஜேஷ், ஆசிக்ராஜா, மணி, ஜான், மகளிர் அணி உமா மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் அனைவருக்கும் அறுசுவை உணவு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.