தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைப்பதற்கான அஸ்திவாரத்தை தேனியில் இருந்து துவங்கி உள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தல் , அதனை தொடர்ந்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது. அதனை தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சிறு சலசலப்பு ஏற்பட்டது. பெயருக்கு தான் இரட்டை தலைமை ஆனால் எந்த ஒரு விஷயத்திலும் கலந்து ஆலோசிக்க அழைப்பதில்லை.முடிவு எடுத்த பிறகு தான் தன்னிடம் அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருந்தார்.
ராஜேந்திர பாலாஜி கைது செய்யபட்ட போது அதிமுக தலைமை அமைதியாக இருந்தது, ஜெயிலில் இருந்து ராஜேந்திர பாலாஜி வந்த பிறகு கூட அதிமுக தலைமை சந்திக்க மறுத்தது. ஜெயக்குமார் கைது நடவடிக்கை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்லலாம். சமீபத்தில் கூட புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க சென்ற போது கூட ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து செல்லவில்லை. அவர் தனியாக சென்று தான் ஜெயக்குமாரை சந்தித்தார்.
மேலும் அதிமுகவில் தலைமை சரி இல்லை என்று அவ்வப்போது சசிகலாவும் அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருந்தார். மேலும் அதிமுக கொடி பொருத்திய காரில் வலம்வருவது, அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கைகள் வெளியிடுவது என்று அதிரடி இல்லை என்றாலும் அதிமுக தலைமையை அதிர வைக்கும் விதமாக இருந்தது.
சட்டமன்றத்தில் கூட எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற பதவி ஓ.பி.எஸ்க்கு கொடுக்க காரணம் எங்கு நமக்கு எதிராக படையை திரட்டி விடுவாரோ என்ற பயத்தில் எடப்பாடி கொடுத்துள்ளார்.ஆனால் எடப்பாடியும் கட்சியை கவனிப்பதில் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை. ஒருபுறம் திமுக அடிக்க மறுபுறம் பால் ஊற்றி வளர்த்த பாஜக அடிக்க என்ன செய்யவதென்று புரியாமல் இருந்த போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது சசிகலா ஒற்றுமையுடன் இருந்தால் தான் வெல்ல முடியும் என்று ஒரு ரகசிய தூது அதிமுகவிற்கு அனுப்பினார்.அது யாருக்கு புரிந்ததோ இல்லையோ ஓ.பன்னீர்செல்வம் புரிந்த காரணத்தால் தான் இன்று அதிரடி நடவடிக்கையாக சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுடன் தேனியில் ஒரு ரகசிய கூட்டத்தை போட்டு தீர்மானத்தையும் நிறைவேற்றி உள்ளார்.
இந்த ரகசிய கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு பிறகு ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். தேர்தல் வெற்றி தோல்வி குறித்து எங்கும் எதுவும் பேசாமல் இருந்து வந்த ஓபிஎஸ் அதிமுகவில் போர்க்கொடி தூக்கி பாஜகவுடன் இணைந்து அதிமுகவை தன்வசபடுத்துவார் என்று நினைத்த நிலையில் தற்போது இப்படி ஒரு அதிரடியை தனது சொந்த மாவட்டத்தில் இருந்து தொடங்கி உள்ளார்.
மேலும் அடுத்த நடவடிக்கையாக வரும் 5 ம் தேதி தனது ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேரை சசிகலாவை கட்சியில் இணைப்பதற்கு ஆதரவாக பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை நடத்தி அதில் கையெழுத்து வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எந்த தேனியை தக்கவைத்து கொள்ள முடியவில்லை என்று ஏளனம் செய்தார்களோ அந்த தேனியை மீண்டும் தனது கோட்டையாக மாற்ற இந்த முறை இப்படி ஒரு திட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் கையில் எடுத்துள்ளார்.
- சிந்தனைத் துளிகள்• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன […]
- பொது அறிவு வினா விடைகள்1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் […]
- குறள் 210:அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று […]
- திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்து – பொதுமக்கள் அவதிசாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு […]
- பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுபொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, […]
- தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு […]
- வாட் வரியை குறைக்க சொல்வதில் நியாமில்லை -பழனிவேல் தியாகராஜன்மாநிலஅரசுகளை வாட்வரியை மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு.பெட்ரோல், […]
- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.முன்னாள் […]
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு -ப.சிதம்பரம் கருத்துபெட்ரோல் விலையை ரூ10 உயர்த்திவிட்டு ரூ9.50 குறைத்திருப்பது கொள்ளை அடிப்பதற்கு சமம்என ப.சிதம்பரம் கருத்துதெரிவித்துள்ளார்.மத்திய அரசு […]
- பெட்ரோல், டீசல் விலை குறைப்புசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் […]
- 2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டிபிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் […]
- இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, […]
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய கோரிக்கைசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் […]
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை […]
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]