திமுக அரசின் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், சென்னை சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால், சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து நின்றது.
தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெறுவதாக எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. தமிழகத்தில சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், கடந்த 20 நாட்களில் சென்னையில் 18 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும் கொள்ளை சம்பவங்களும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதாக கூறியிருந்தார். இந்தநிலையில் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டையில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாரயம் அழிக்கப்பட்டது. இதனையடுத்து கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பாஜக சார்பாக நேற்று தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து அண்ணாமலை புகார் அளித்திருந்தார். அப்போது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தநிலையில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும், கள்ளச்சாராய மரணம் தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் அளிக்க அதிமுக திட்டமிட்டது. இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று ஆளுநரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமயில் பேரணியானது இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணியின் காரணமாக அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் கடந்த செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றது. குறிப்பாக வேளச்சேரி, கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் அதிகளவு காணப்பட்டது. பணிக்கு செல்வபவர்களும், விமான நிலையத்திற்கு செல்பவர்களும் உரிய நேரத்தில் தங்களது இடங்களை அடைய முடியாமல் தவித்தனர். மேலும் அந்த பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]