மதுரை அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன், தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார். நரிமேடு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது…,
தி.முக-வை வீட்டிற்கு அனுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. புரட்சித் தலைவி அம்மாவை வெற்றிபெற செய்ய மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். கடந்த திமுக அக்கிரமங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அதனை நினைவில் வைத்து வாக்களர் வாக்களிக்க வேண்டும்.