சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா. பஸ்நிலையம் முன்பு உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்வினை நகர செயலாளர் ராஜா ஏற்பாடுகள் செய்திருந்தார். விழாவில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, அருள்ஸ்டிபன், கோபி,ஸிதர், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் தமிழ்செல்வன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து,நகர துணை செயலாளர் மோகன், அவைத்தலைவர் பாண்டி,நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி, ஒன்றிய இளைஞரணி முத்துப்பட்டி பாபு, அச்சக கூட்டுறவு சங்க தலைவர் சசிக்குமார்,பாகனேரி கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ்,மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், கவுன்சிலர் ராபர்ட், மாவட்ட பாசறை பொருளாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் கேபி.முருகன்,காஜா,பழனி, மாரிமுத்து, மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.