அதிமுக-வில் தலைமையே கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்த நிலையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம் என்று சசிகலா கூறியுள்ளார்.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் ஒன்றைக் கூட அதிமுக கைப்பற்றவில்லை.
மேலும் பல மாவட்டங்களில் முழுவதுமாக வாஷ்-அவுட் ஆனது அதிமுக. இதனால் அதிமுக தொண்டர்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கின்றனர்.
அதிமுக இந்த தேர்தலை தனியாக எதிர்கொண்டது. இந்த தோல்வி எதிர்பார்த்தது தான் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் முதலிடத்தில் இருக்கும் திமுகவுக்கும், இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிமுகவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ”அதிமுகவில் தற்போது தலைமையே இல்லை. இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுக திமுகவில் சங்கமமாகிவிடும் என ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை; வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை.
தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும்; மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது. பாஜக வளரும் கட்சி என்பதால் 3வது பெரியகட்சி என அண்ணாமலை சொல்கிறார். நடந்து முடிந்த தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக தன்னுடைய பணபலத்தால் வெற்றியை பெற்றுள்ளது” என்றார்.
இந்நிலையில், சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய சசிகலா கலந்துகொண்டார். அப்போது, ”50 ஆண்டு கால வரலாற்றில் அதிமுக தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை மனதில் எண்ணி பார்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல இடங்களில் டெபாசிட் கூட அதிமுக வேட்பாளர்கள் பெறவில்லை. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அதிமுக. அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால் தான் இந்தத் தோல்வி என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு தலைமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். செல்லூர் ராஜூ கூறியதற்கு சசிகலா சூசகமாக பதிலளித்துள்ளார்.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]