நகர்புற உள்ளாட்சி தேர்தலன்று(19ம் தேதி) கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கிய வழக்கில் 21 ம் தேதி இரவு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையானது இன்று காலை 10.30 மணியளவில் அளவில் ஜி.டி கோர்ட் 15 வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஜெயக்குமாரின் மகனும், முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன், பெஞ்சமின், செங்கோட்டையன், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், உடுமலை ராதாகிருஷ்ணன், மனோஜ்பாண்டின் பாலகங்கா, கே.பி.கந்தன், கோகுல இந்திரா, விருகை ரவி, ஆதிராஜராம் போன்ற அதிமுக நிர்வாகிகளும் 500 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர்.
பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நாற்காலியில் அமரவைத்து வழக்கு விசாரணையை தொடங்கினார் மேஜிஸ்ட்ரேட் முரளி கிருஷ்ணா ஆனந்த். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கள்ள ஒட்டு போட்ட நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். வேறு எந்த தவறும் அவர் செய்யவில்லை எனவும் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கும் அளவுக்கு இந்த வழக்கு உகந்தது இல்லையென்றும் தேவைப்பட்டால் சிறைக்குள் சென்று போலீஸ் விசாரிக்கட்டும் என்று ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
அதற்கு, ஜெயக்குமார் பதிவிட்ட வீடியோ குறித்து ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் சிசிடிவி காட்சிகள் வைத்தும் விசாரிக்க வேண்டும் எனவும் காவல்துறை தனது தரப்பு வாதங்களை முன்வைத்தது. காலை 11 மணிக்கு ஆரம்பித்த விசாரணையானது மதிய உணவு இடைவெளிக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. பின் வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்ட்ரேட் காவல்துறையின் போலீஸ் கஸ்டடி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக நேற்று முந்தினம் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜாமின் பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது GT கோர்ட் 16 வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் தயாளன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் தயாளன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் ஜெயகுமார் தரப்பு வழக்கறிஞர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் விசாரணையானது தற்போது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- சிந்தனைத் துளிகள்• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன […]
- பொது அறிவு வினா விடைகள்1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் […]
- குறள் 210:அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று […]
- திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்து – பொதுமக்கள் அவதிசாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு […]
- பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுபொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, […]
- தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு […]
- வாட் வரியை குறைக்க சொல்வதில் நியாமில்லை -பழனிவேல் தியாகராஜன்மாநிலஅரசுகளை வாட்வரியை மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு.பெட்ரோல், […]
- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.முன்னாள் […]
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு -ப.சிதம்பரம் கருத்துபெட்ரோல் விலையை ரூ10 உயர்த்திவிட்டு ரூ9.50 குறைத்திருப்பது கொள்ளை அடிப்பதற்கு சமம்என ப.சிதம்பரம் கருத்துதெரிவித்துள்ளார்.மத்திய அரசு […]
- பெட்ரோல், டீசல் விலை குறைப்புசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் […]
- 2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டிபிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் […]
- இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, […]
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய கோரிக்கைசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் […]
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை […]
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]