ஜூலை 11ல் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கான இடம் தயார் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதுதான் தற்போதைய பரபரப்பே.
கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவைத் தலைவரின் தலைமையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக் குழு நடைபெறும் எனவும். அன்றைய தினம் கட்சிக்கு ஒற்றைத் தலைமை யாரென ஒருமனதாக முடிவு செய்யப்படும் என்றும் இபிஎஸ் தரப்பில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு சட்டத்துக்கு புறம்பாக நடைபெற்றுள்ளதால் அது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். அதேசமயம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஓபிஎஸ் தரப்பு இறங்கி உள்ளது.
ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை எங்கு கூட்டலாம்? என்று தீவிர ஆலோசனையில் இறங்கியது இபிஎஸ் தரப்பு. எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி, கோவை மற்றும் சேலம் என பல்வேறு இடங்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் குழு சென்னையில் எங்கெல்லாம் நடத்தலாம் என்று பட்டியல் போட்டது. பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு, விஜிபி ரிசார்ட்டை தேர்வு செய்து, இங்கேயே அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளார்கள். இதை அடுத்து பொதுக்குழு கூடுவதற்கான இடம் முடிவாகி விட்டதால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஓபிஎஸ் தரப்பு இறங்கக்கூடும், அதனை முறியடிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள் எடப்பாடி தரப்பு.
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]
- பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆலோசனையின் பேரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை […]
- ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..!உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு […]
- பழனி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், […]
- மரக்காணம் அருகே பறவைகள் சரணாலயம்..!விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பறவைகள் வந்து செல்லும் வலசை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் […]
- அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது- பிரியங்கா காந்திராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அதிகார வெறி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ரியல் ஹீரோ: ஓர் உளவியல் பதிவு..! உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை […]
- நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக […]
- சோழவந்தானில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.பொருள் (மு.வ): அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் […]
- நீலகிரி மாவட்டம் பாலகெலா ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் பாலகெலா ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் […]
- உதகை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாஉதகை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 4வது நாளான நேற்று உபயதாரர் பராசக்தி மகளிர் வார […]
- மதுரை அருகே விபத்து – 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயம்மதுரை அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து 3 பெண்கள் உட்பட ஐந்து […]