• Sat. Jul 12th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

நடிகர் சுனில், விஜய் மில்டனின் இருமொழி படத்தில்..,

Byஜெ.துரை

Jun 11, 2025

புகழ்பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில், பிரபல நடிகர் சுனில் இணைந்ததை ரஃப் நோட் புரொடக்ஷன் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

பல்வேறு கதாப்பாத்திரங்களிலும் திரைப்படத் துறைகளிலும் தனது பலதரப்பட்ட திறமைகளுக்குப் பெயர் பெற்ற நடிகர் சுனில், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பணி புரிந்த அனுபவத்தையும், மயக்கும் திரை ஆளுமையையும் இந்தத் திரைப்படத்தின் மூலம் கொண்டு வருகிறார். ‘மரியாதா ராமண்ணா’, ‘அந்தலா ரமுடு’, ‘புஷ்பா’ போன்ற திரைப்படங்களில் நினைவில் நிற்கும் நகைச்சுவை மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள சுனில், இந்த திரைப்படத்தின் மதிப்பை பெருக்குவதுடன், மற்ற மாநில ரசிகர்களிடையே பரவலான வரவேற்பையும் உறுதி செய்கிறது.

இந்தத் திரைப்படத்தில், சுனில் தனது இயல்பான வசீகரத்தன்மையுடன், எதிர்பாராத உணர்ச்சிப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த வேடம், அவரது நடிப்பு பயணத்தில் ஒரு புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தி, ரசிகர்கள் இதுவரை பார்க்காத ஒரு தீவிரமான, பல பரிமாணங்கள் நிறைந்த, உணர்வுப்பூர்வமான சுனிலை காணும் வாய்ப்பை அளிக்கிறது.

சுனிலை இந்தக் கதைக்காக தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில்,

சுனில் வெறுமனே ரசிகர்களின் விருப்பமான நடிகர் மட்டும் அல்ல—அவர் ஆழமும், நுண்ணுணர்வும் கொண்ட ஒரு சிறந்த நடிகர். இந்தக் கதாபாத்திரம், அவர் இதுவரை செய்த எந்த வேடத்தையும் போல் அல்ல. இது இயல்பு, எதிர்மறைத்தன்மை மற்றும் சக மனிதர்களுக்குள்ள குணத்தை கொண்ட ஒரு கதாபாத்திரம். இந்தப் படத்தில், ரசிகர்கள் அவரை வேறொரு புதிய வகையில் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.