தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகரான சிவக்குமார் தன்னை நாயகனாக நடிக்க வைத்து படங்களைத் தயாரித்த தயாரிப்பாளருக்கும், தனது நண்பரான தமிழறிஞர் ஒருவருக்கும் அவர்களின் தற்போதைய வாழ்க்கைக்கு உதவும்வகையில் அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார்.
நடிகர் சிவக்குமார் 1965-ம் ஆண்டில் இருந்து திரைப்பட துறையில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுவரையிலும் 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ்த் திரையுலகத்தில் சிறந்த மனிதராக பலராலும் போற்றப்படும் நடிகர் சிவக்குமார் தனது பால்ய கால நண்பர்களைத் தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்கு வெளியுலகம் தெரியாமல் பல உதவிகளைச் செய்து வருகிறார்.கடந்த 2 வாரங்களுக்கு முன்புகூட 50 வருடங்களுக்கு முன்பு தன்னுடன் ஓவியக் கல்லூரியில் படித்த ஒரு நண்பரை சென்னை ராயப்பேட்டையில் தீவிர முயற்சிக்குப் பின் கண்டுபிடித்து தற்போது அவரது வாழ்க்கைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.
அதேபோல் தற்போது தன்னை வைத்து படமெடுத்த ஒரு தயாரிப்பாளருக்கும் பெரிய உதவியைச் செய்திருக்கிறார் நடிகர் சிவக்குமார்.சமீபத்தில் தமிழக அரசு அளித்த சிறந்த தமிழறிஞர்களுக்கான விருது பெற்றவர்களில் இருவர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.இவர்களில் ஒருவர்தான் சூலூர் கலைப்பித்தன். இவர் 1980-களில் நடிகர் சிவக்குமாரை ஹீரோவாக நடிக்க வைத்து 2 படங்களை தயாரித்தவர். இவர் தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதன் நினைவு பரிசினை பெற்றவர்.தற்போது தனக்கு வரும் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டணத்தில் சென்று வந்து கொண்டிருக்கிறார்.
இதேபோல் நடிகர் சிவக்குமாரின் நீண்ட நெடுங்கால நண்பர் புலவர் செந்தலை கவுதமன். இவர் தமிழக அரசின் பாரதிதாசன் விருதினை பெற்றிருக்கிறார். 69 வயதான புலவர்.செந்தலை கவுதமன் தற்போதும் சைக்கிளில்தான் சென்று கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூலூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் தலைமையேற்று இருவருக்கும் பரிசு கேடயம் வழங்கி கெளரவித்தார்.இந்த விழாவில்தான் இவர்கள் இருவரின் வாழ்க்கைச் சூழலுக்கும் உதவும் பொருட்டு இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 மோட்டார் சைக்கிளை பரிசளித்துள்ளார் நடிகர் சிவகுமார்.

- இன்று வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள்அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, […]
- சுடுகாட்டில் மொட்டை அடித்து காங்கிரஸ் போராட்டம்- பாஜக புகார்நாகர்கோவிலில் உள்ள அனைத்து சமுதாய சுடுகாட்டில் மோடி படத்துடன் மொட்டை அடித்து மாநகர தலைவர் நவீன்குமார் […]
- பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்நடிகர் கௌதம் கார்த்திக் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் பத்துதல என்கிறார் ‘பத்து தல’ […]
- அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ டீசர் வெளியானதுநடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘மைதான்’ இருக்கிறது. உலக அளவில் பலராலும் […]
- மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் -உதவிசெயற்பொறியாளர் கைதுமதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் […]
- பிரபாஸ் நடிக்கும்ஆதிபுருஷ் போஸ்டர் வெளியீடு சர்ச்சையை ஏற்படுத்துமா?சினிமாவில் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும்படங்களில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் இடம்பெற்றுள்ளது.இந்த திரைப்படம் 2023ஜூன்மாதம் 16ஆம் […]
- மதுரை காமராஜர் பல்கலை. விடுதி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலிமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி தவறி […]
- நகை திருட்டு புகார் மனுவை மாற்றியஐஸ்வர்யா ரஜினிகாந்த்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை காணாமல்போனது சம்பந்தமாக காவல் துறையில் புகார் கொடுத்தது பல்வேறு […]
- தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்தவமனைகளில் மாஸ்க் கட்டாயம் […]
- பத்துதல- திரைவிமர்சனம்வேற்று மொழியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் தயாரிப்பது அதுவும் வியாபாரம் உள்ள நடிகர்களை நடிக்க வைத்து […]
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]