• Fri. Apr 19th, 2024

அதிகாரியை மிரட்டியதாக நடிகர் திலீப் மீது வழக்குப்பதிவு!

விசாரணை அதிகாரியை மிரட்டியதாக, பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் திலீப் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். கேரளம் முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில் நடிகர் திலீப், அவருடைய சகோதரி உள்ளிட்ட 6 பேர் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறி அவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *