இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், நடிகை பிரியா பவானிசங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இதனையொட்டி, அப்படத்தை ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், நடிகர் அருண்விஜய், இயக்குனர் ஹரி ஆகியோர் தமிழகத்தில் மாவட்டம் மாவட்டமாக சென்று டிரெய்லரை வெளியிட்டு படத்தை பிரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு வந்த அவர்கள், வேலூர் விருதம்பட்டில் உள்ள விஷ்ணு சினிமாஸ் திரையரங்கில் ‘யானை’ பட டிரைலர் மற்றும் ஒரு பாடலை வெளியிட்டு ரசிகர்களுடன் அமர்ந்து அருண்விஜய், ஹரி ஆகியோர் பார்த்தனர். பின்னர் ரசிகர்கள், திரையரங்கிற்கு வந்த மக்கள் கேட்ட கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் அருண்விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; “யானை திரைப்படம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்து பார்க்கக்கூடிய படம். கிராம சூழலில் பெண்கள், இளைஞர்கள் என்று அனைவரும் கண்டு ரசிக்கும்படியாக எடுத்துள்ளோம். எனது திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு சிறப்பான படமாக அமையும்.
நான் இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரமாகவும், கதைக்களம் வித்தியாசமாகவும் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில் உணர்வுபூர்வமான கதையாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் பிடிக்கும் படத்தை பார்த்து முடிக்கும்போது எமோஷ்னல் படத்தை பார்த்த திருப்தி கண்ணீர் வரும்படியாக அனைவருக்கும் இருக்கும்.
நான் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்த படம் தான் எடுக்கப்பட்டுள்ளது. என்னை அறிந்தால் படத்தில் நான் நடித்திருந்த விக்டர் கதாபாத்திரம், சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. அதனை தாண்டி இந்த படத்தின் கதாபாத்திரம், சண்டைகாட்சிகள் பேசப்படும். 2 சண்டைகாட்சிகள் புது முயற்சியாக செய்துள்ளோம். அவை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும்.
கிராம பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படம் வித்தியாசமாக இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். தற்போதைக்கு வில்லனாக நடிக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் நான் எதிர்பார்க்கிற மாதிரி வில்லனுக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பார்டர், அக்னிசிறகுகள் உள்பட 3 படங்கள் கைவசம் உள்ளன. அதனை முடித்து விட்டு அடுத்தடுத்த படங்களில் நடிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடிகர் அருண்விஜய், இயக்குனர் ஹரி வருகைக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]