• Tue. Apr 23rd, 2024

வேலூர் மக்களுக்கு சர்ப்பரைஸ் கொடுத்த நடிகர் அருண்விஜய்..!

Byவிஷா

Jun 20, 2022

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், நடிகை பிரியா பவானிசங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இதனையொட்டி, அப்படத்தை ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், நடிகர் அருண்விஜய், இயக்குனர் ஹரி ஆகியோர் தமிழகத்தில் மாவட்டம் மாவட்டமாக சென்று டிரெய்லரை வெளியிட்டு படத்தை பிரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு வந்த அவர்கள், வேலூர் விருதம்பட்டில் உள்ள விஷ்ணு சினிமாஸ் திரையரங்கில் ‘யானை’ பட டிரைலர் மற்றும் ஒரு பாடலை வெளியிட்டு ரசிகர்களுடன் அமர்ந்து அருண்விஜய், ஹரி ஆகியோர் பார்த்தனர். பின்னர் ரசிகர்கள், திரையரங்கிற்கு வந்த மக்கள் கேட்ட கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் அருண்விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; “யானை திரைப்படம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்து பார்க்கக்கூடிய படம். கிராம சூழலில் பெண்கள், இளைஞர்கள் என்று அனைவரும் கண்டு ரசிக்கும்படியாக எடுத்துள்ளோம். எனது திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு சிறப்பான படமாக அமையும்.
நான் இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரமாகவும், கதைக்களம் வித்தியாசமாகவும் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில் உணர்வுபூர்வமான கதையாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் பிடிக்கும் படத்தை பார்த்து முடிக்கும்போது எமோஷ்னல் படத்தை பார்த்த திருப்தி கண்ணீர் வரும்படியாக அனைவருக்கும் இருக்கும்.
நான் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்த படம் தான் எடுக்கப்பட்டுள்ளது. என்னை அறிந்தால் படத்தில் நான் நடித்திருந்த விக்டர் கதாபாத்திரம், சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. அதனை தாண்டி இந்த படத்தின் கதாபாத்திரம், சண்டைகாட்சிகள் பேசப்படும். 2 சண்டைகாட்சிகள் புது முயற்சியாக செய்துள்ளோம். அவை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும்.
கிராம பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படம் வித்தியாசமாக இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். தற்போதைக்கு வில்லனாக நடிக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் நான் எதிர்பார்க்கிற மாதிரி வில்லனுக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பார்டர், அக்னிசிறகுகள் உள்பட 3 படங்கள் கைவசம் உள்ளன. அதனை முடித்து விட்டு அடுத்தடுத்த படங்களில் நடிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடிகர் அருண்விஜய், இயக்குனர் ஹரி வருகைக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *