இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், நடிகை பிரியா பவானிசங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இதனையொட்டி, அப்படத்தை ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், நடிகர் அருண்விஜய், இயக்குனர் ஹரி ஆகியோர் தமிழகத்தில் மாவட்டம் மாவட்டமாக சென்று டிரெய்லரை வெளியிட்டு படத்தை பிரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு வந்த அவர்கள், வேலூர் விருதம்பட்டில் உள்ள விஷ்ணு சினிமாஸ் திரையரங்கில் ‘யானை’ பட டிரைலர் மற்றும் ஒரு பாடலை வெளியிட்டு ரசிகர்களுடன் அமர்ந்து அருண்விஜய், ஹரி ஆகியோர் பார்த்தனர். பின்னர் ரசிகர்கள், திரையரங்கிற்கு வந்த மக்கள் கேட்ட கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் அருண்விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; “யானை திரைப்படம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்து பார்க்கக்கூடிய படம். கிராம சூழலில் பெண்கள், இளைஞர்கள் என்று அனைவரும் கண்டு ரசிக்கும்படியாக எடுத்துள்ளோம். எனது திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு சிறப்பான படமாக அமையும்.
நான் இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரமாகவும், கதைக்களம் வித்தியாசமாகவும் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில் உணர்வுபூர்வமான கதையாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் பிடிக்கும் படத்தை பார்த்து முடிக்கும்போது எமோஷ்னல் படத்தை பார்த்த திருப்தி கண்ணீர் வரும்படியாக அனைவருக்கும் இருக்கும்.
நான் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்த படம் தான் எடுக்கப்பட்டுள்ளது. என்னை அறிந்தால் படத்தில் நான் நடித்திருந்த விக்டர் கதாபாத்திரம், சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. அதனை தாண்டி இந்த படத்தின் கதாபாத்திரம், சண்டைகாட்சிகள் பேசப்படும். 2 சண்டைகாட்சிகள் புது முயற்சியாக செய்துள்ளோம். அவை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும்.
கிராம பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படம் வித்தியாசமாக இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். தற்போதைக்கு வில்லனாக நடிக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் நான் எதிர்பார்க்கிற மாதிரி வில்லனுக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பார்டர், அக்னிசிறகுகள் உள்பட 3 படங்கள் கைவசம் உள்ளன. அதனை முடித்து விட்டு அடுத்தடுத்த படங்களில் நடிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடிகர் அருண்விஜய், இயக்குனர் ஹரி வருகைக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
- குறள் 232:உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றுஈவார்மேல் நிற்கும் புகழ். பொருள் (மு.வ):போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் […]
- விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு ராஜன்செல்லப்பா குடும்பத்திற்கு தகுதியில்லை.., எஸ்.எஸ்.கதிரவன் குற்றச்சாட்டு!தற்போதைய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பாவின் அரசியல் […]
- அதிமுகவை பற்றி எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார்! செல்லூர் ராஜூ உருக்கம்..80 சதவீதம் தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கம் அதிமுக இருக்கும் என எம்ஜிஆர் […]
- ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், […]
- என்னுடைய எதிர்காலத்தை தொண்டர்கள்தான் தீர்மானிப்பார்கள்! ஓபிஎஸ் பரபரப்பான பேச்சு…பெரியகுளம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு மதுரை […]
- ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், […]
- டாக்டர் அழகு ராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்திப்புடாக்டர் அழகுராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்தி்தது பேசி வருகின்றனர்இது குறித்து டாக்டர் அழகுராஜா கூறுகையில் விழுப்புரத்தின் […]
- அமைச்சர் அர.சக்கரபாணியுடன் டாக்டர் அழகுராஜா சந்திப்புதமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியுடன்டாக்டர் அழகுராஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பு. இச்சந்திப்பு […]
- நூலிழையில் உயிர் தப்பி முதல்வர்ஹெலிகாப்டர் விபத்தில் உ..பி.முதல்வர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் […]
- 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நாளை வெளியீடுநாளை காலை 10 மணியளவில் 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறதுதமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]
- டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசிய ஓபிஎஸ் -ஆர் .பி. உதயகுமார்ஓ.பன்னீர்செல்வம் ,டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் […]
- ஆளுக்கொரு பாதையில் பயணிக்கும் ஓபிஎஸ்,இபிஎஸ்,சசிகலாசசிகலா தமிழகம் முழவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதேபோல ஓபிஎஸ்,இபிஎஸ் ஆளுக்கொரு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் […]
- சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வுசர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கானசர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா […]
- சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி […]
- குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லைகுடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். […]