பாலாவின் நெருங்கிய நண்பரும் அவரது படங்களின் இணை இயக்குநருமான ‘ஆச்சார்யா’ ரவி திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.
‘சேது’படம் தொடங்கி ஏறத்தாழ பாலாவின் அத்தனை படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ரவி. சேது வெளிவருவதற்கு முன் அவரது அறைத்தோழருமாக இருந்தவர். இருவரும் ’போடா வாடா’ என்று அழைத்துக்கொள்ளும் அளவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள்.
2006ம் ஆண்டு விக்னேஷ் நாயகனாக நடித்த ‘ஆச்சார்யா’படத்தை இயக்கிய பின்னர் ஆச்சார்யா ரவி என்று அறியப்பட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஆச்சார்யா ரவியின் மரண செய்தியை தெரிவித்த அவருடன் சமீபகாலமாகநெருங்கிய தொடர்பில் இருந்ததயாரிப்பாளர்கஸாலி தெரிவித்ததாவது
இன்று (28.12.2021) காலை இப்படியொரு துக்கமான செய்தி வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
‘ஆச்சார்யா’ ரவி!
இயக்குநர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான் அவர்களிடம் உதவியாளராகப் பணி செய்தவர்.
இயக்குநர் பாலாவிடம் பல படங்கள் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர்.
அவரது இரண்டாவதுவது படம் ‘என்னதான் பேசுவதோ’.
பீகாரிலிருந்து பெண் குழந்தைகளை எப்படித் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அந்தப் பெண் தமிழ் நாட்டில் வளரும்போது டீன் ஏஜ் பையன்களுடன் எப்படி வெள்ளந்தியாகப் பழகுகிறாள், துபாய்க்கு அவளை அனுப்ப முயலும்போது என்ன நடக்கிறது, முடிவு என்ன என்பது பற்றிய கதை.
விரசமில்லாமல், ஆழமான காட்சிகளோடு படமாக்கியிருந்தார்.
இசையமைப்பாளர் டி.இமான் D.imman நெஞ்சை உருக்கும் வகையில் பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்திருந்தார்.
அந்தப் படத்தை எங்கள் தமிழ் சினிமா கம்பெனி வெளியிடுவதாக இருந்தது.
பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே
பாலா சூர்யா இணையும் படத்தில் வேலை செய்யச் சென்று விட்டார்.
பாலாவிடம் டிஸ்கஸ் செய்வதற்காக லியாகத் அலிகான் அவர்களை பாலா அழைப்பதாக ரவி கூட்டிச் சென்றார்.
ஏற்கெனவே லியாகத் அவர்கள் பாலாவின் ‘நந்தா’ படத்தின் கதையில் நிறைய கருத்துக்களைக் கொடுத்திருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன் சிறிய உடல் நோவு காரணமாக ரவி, சென்னையில் மருத்துவமனையில் சேர்ந்தார்.
பின்பு மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார்.
இன்னும் சில நாட்களில் குணமாகி சென்னைக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, காலையில் ‘ராசைய்யா’ கண்ணன் ரவியின் மரணம் பற்றிய செய்தியோடு மனதில் பாரத்தை ஏற்றினார்.
சினிமா பற்றிய எத்தனை கனவு, எத்தனை ஈடுபாடு, விளிம்பு நிலை மக்களைப் பற்றிய கதைகளை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம்… நிறையப் பேசியிருக்கிறோம். அவையெல்லாம் கனவாய் ஒரு நொடியில் பறந்து விட்டது.எல்லோருக்கும் பொதுவான இறைவனின் நிழலில் அவரது ஆன்மா அமைதியுறட்டும் என்றார்
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]