• Wed. May 22nd, 2024

இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

ByG.Suresh

Apr 13, 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நெசவாளர் காலனியில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவர் அருகே உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ஆறுமுகம் நேற்று இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு திரும்பிய போது கோவிலூர் என்னும் இடத்தில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில்,
தற்போது விபத்து குறித்த காட்சி வெளியாகி காண்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *