கடந்த சிலநாட்களாக சென்னையில் பெய்துவரும் மழைகாரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு மக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலையில் தொடர்ந்து கனமழை வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது. சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.மழை பெய்யும்போதுமட்டுமே அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவது நிரந்தர தீர்வாகாது என்றும் விமர்சித்துள்ளது.