• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சியில் ஆற்றில் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்படை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிகப்பட்டது. கல்வராயன் மலையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கல்படை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அதன் குறுக்கே உள்ள தரைப்பாலம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் இந்த பாலத்தை பயன்படுத்தி வரும் ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.