• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை திமுக அரசுதோல்வி- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

Nov 2, 2022

திமுக அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. சென்னையில் நேற்று ஏற்பட்ட மழைபாதிப்பு ஒரு சான்றாக இருந்ததாக தெரிவித்தார். சிங்கார சென்னை 2.0 வில் 2800 கோடி வங்கியில் கடனாக பெற்று முறையாக செயல்படுத்தவில்லை. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.