• Thu. May 2nd, 2024

திமுக அரசு கண்டித்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் -எடப்பாடியார் உரையாற்றுகிறார்

Byதரணி

Sep 28, 2022

திமுக அரசு கண்டித்து சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் . நடைபெறுகின்றது.
பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் உரையாற்றுகின்றார். பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டனர்.
விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் நாளை காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணாமலையார் நகர் அம்மா திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் மாநிலம் முழுவதும் இருந்தும் அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்க்காக பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. மேடை அமைக்கும் பணிகளை இரவு பகலாக அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றார். பொதுக்கூட்டம் காலை நேரம் என்பதால் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் கூலிங் மேடை அமைக்கப்பட்டுள்ளது.


500க்கும் மேற்பட்ட டூவீலர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சிறப்பாக செய்திருக்கின்றது. கூட்டத்திற்கு வரும்தறும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் படை புடை சூழ மேடையில் வந்து கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி . உரை ஆற்றுகின்றார். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்து வருகின்றார். இந்நிலையில் பொதுக்கூட்ட மேடையை நேற்று முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டனர். அப்போது திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துபாண்டியன், விருதுநகர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்அனந்த், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம் (எ)ராஜஅபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், ஆரோக்கியம், கருப்பசாமி, ஒன்றிய கழக பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், ஒன்றிய கழக துணை செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன் மற்றும் மாவட்டகழக மாநகர கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *