இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நீட்டை முன்வைத்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு தமிழக ஆளுநர் பதில் சொல்லவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருக்கிறார். பாஜகவின் கூட்டணி கட்சியான பாமக ஒன்றிய அரசை விமர்சிக்கும் போது பெரும்பாலும் நிதானத்தை கடைபிடிக்கும் சூழலில் இத்தகைய விமர்சனம் வந்திருப்பது கவனிக்க தக்கது.