• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்

ByA.Tamilselvan

Sep 5, 2022

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அந்த வகையில் தகுதியான மாணவிகளின் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது.உதவித்தொகை பெறும் மாணவிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழா மற்றும் மாதிரிப் பள்ளிகள், சீர்மிகு பள்ளிகள் தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.