தான் மனரீதியாக பலகீனமாக உணர்கிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தெரிவித்துள்ளார்.
ஆசியகோப்பை தொடர்பாக சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ள அவர் “கடந்த 10 வருடங்களில் ஒரு மாதம் முழுவதும் பேட்டை தொடாதது இதுவே முதல்முறை நான் மனரீதியாக பலவீனமாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கம் இல்லை. இதை விட பலமாக இருப்பதை போல போலியாக நடிப்பது மிகவும் மோசமானது” என கூறியுள்ளார் .