• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசு அறிவிப்பு

Byகுமார்

Sep 25, 2021

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.12,750லிருந்து ரூ.13,250 ஆக அதிகரிக்கிறது. மேலும் விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.11,100ஆகவும், உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.10,000ஆகவும், தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750இல் இருந்து ரூ.13,250ஆக உயர்த்தப்படுகிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த ஊதிய உயர்வால் டாஸ்மாக் உழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.