அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது ஆனால்இதில் ஓபிஎஸ் மட்டும் விதிவிலக்கா என்று கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக முன்னாள் எம்.எல் ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக பதவியேற்று ஒருவருடம் ஆகியும் ஓபிஎஸ் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்படுகிறது. அதிமுக ஆட்சியின் போதே ஓபிஎஸ் மீது ஆளுநரிடம் சென்று ஊழல் பட்டியலுடன் புகார் கொடுத்தார் திமுகவின் ஆர்.எஸ் .பாரதி அதன் பேரில் திமுக ஆட்சியிலும் நடவடிக்கை இல்லை என்று புகார் எழுந்துள்ளது.