ஒபிஎஸ் வகித்து வரும் பொருளாளர் பதவியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவுசெய்துள்ளார். இந்நிலையில் புதிய பொருளாளராக யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.இக்கூட்டத்தில் ஓபிஎஸை அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கிவிட்டு கட்சியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.அதிமுக பொருளாளராக ஓபிஎஸ் நீண்ட வருடங்களாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ஓபிஎஸை நீக்கிவிட்டு புதிய பொருளாளரை நீயமிப்பது குறித்து அவைத்தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக பொருளாளராக கே.பி.முனுசாமி,செங்கோட்டையன்,எஸ்.பி.வேலுமணி அல்லது திண்டுக்கல் சீனிவாசன் இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.