• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் – ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Jun 16, 2022

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த விவாதம் நடைபெற்றுவருகிறது.ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார். சென்னையில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஒற்றைத் தலைமை குறித்த தனது வீட்டில் 3 நாட்களாக ஓபிஎஸ் ஆலேசனை மேற்கொண்டு வந்தார். சற்று நேரத்திற்கு முன் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த நிலையில், ஓபிஎஸ் தலைமை அலுவலகம் வந்தார். ஆலோசனைக்கு முன்பாக தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திசென்ற நிலையில் ஓ.பி.எஸ் ஆலோசித்து வருகிறார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். வைத்திலிங்கம், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன், தர்மர், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், செம்மலை, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.