• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு பொதுப் பணிகளில் அடங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நகர ஊரமைப்பு உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 2,05,700
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 32 வயதற்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் 200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.05.2022

தாள்-I பாடத்தாள்: 28.05.2022 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள்-II பகுதி-அ: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்)
பகு ஆ பொது அறிவு(பட்டப்படிப்புத் தரம்): 28.05.2022 அன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/2022_04_AD_Town%20and%20Country%20Planning_Tamil.pdf என்ற லிங்கிற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.