அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.