• Sun. Apr 28th, 2024

சிவகாசி வெடிவிபத்து – 4 பேர் பலி!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமான நிலையில் தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.

சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *