மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வாடிப்பட்டி பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக இரட்டைமலை சீனிவாசன்
நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலா ளர் தமிழாளன்தலைமை தாங்கி இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். மாவட்ட பொருளாளர் அதிவீரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் யுவராஜா வரவேற்றார் .
இதில் செய்தி தொடர்பாளர் பதினெட்டாம்படி, கச்சைகட்டி ஜெயலட்சுமி, ஈழ நிலவன், அன்பழகன், சின்னச்சாமி, சுரேஷ் சுரேந்தர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராமசாமி நன்றி கூறினார்.




