மதுரை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கொளுத்திய வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் மாலையில் திடிரென அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

மதுரை மாட்டுத்தாவணி, கே.கே.நகர், கோரிப்பாளையம், அண்ணாநகர், அண்ணா பேருந்துநிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செல்லூர், ஆரப்பாளையம், சிம்மக்கல், தெற்குவாசல் ஆனையூர், கீழவாசல், கடச்சனேந்தல், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

இதன் காரணமாக சிம்மக்கல், ஆரப்பாளையம், தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பு மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி உள்ள பகுதி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியது.
மதுரையில் பல மாதங்களுக்கு பிறகு பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.




