நத்தம் அருகே சட்டவிரோதமாக மணல் திருடிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரவங்குறிச்சி பகுதியில் தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சட்டவிரோதமாக அனுமதி இன்றி மணல் அள்ளி வந்த 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து
நத்தம், சேத்துாரை சேர்ந்த ராஜசேகர் (40), மாரி(39), ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




