மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவத் திருமடம் அமைந்துள்ளது. தருமை ஆதின மடம், மற்றும் தமிழ் சேவா சங்கம் இணைந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் துவக்கி உள்ளன.

ஏழைபுர மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் முற்றிலும் இலவசமாக இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வகுப்பறைகளில் நடத்தப்படுகின்றன .

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இது தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பார்கள் என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் டிஜிட்டல் போர்டில் எழுதி தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்தார்.
திருச்சி கூடுதல் வருமான வரித்துறை ஆணையர் ராஜேஸ்வரி, வருவாய் கோட்ட அலுவலர் விஷ்ணு பிரியா மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




