மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கலில் செயல்படும் மாவட்ட மைய நூலகத்தில் சுதந்திர தினம் முன்னிட்டு வாசகர்கள் பயன்பாட்டுக்கு பிளாஸ்டிக் சேர்கள் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் வழங்க மாவட்ட முதன்மை நூலகர் நித்யானந்தம் பெற்றுக் கொண்டார். மாவட்ட நூலக அலுவலர் பழனிச்சாமி தேசியக் கொடி ஏற்றினார். சமூக சேவகர்கள் ரமேஷ்குமார், ஈஸ்வரன், நூலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





