விருதுநகர் ராஜாக்கள் தெரு அருகில் உள்ள அ ச ப ச சி அங்கன் வாடி மையத்தை இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து மாணவ, மாணவியற்களுக்கு சிலேட்டு, புத்தகம் வழங்கினார்கள்.

இந்த விழாவில் விருதுநகர் நகராட்சி ஆணையர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் அருகில் உள்ள செந்தில் குமார நாடார் மீனாட்சி அம்மாள் பள்ளிக்கு சென்று அங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் நோட், புத்தகம் வழங்கினார்.





