• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஆத்தூர் அணையில் நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் அவதி..,

ByS.Ariyanayagam

Jul 24, 2026

ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் சரிவு திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்குவது ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் (ஆத்தூர் அணை) ஆகும். கடந்த சில மாதங்களாக மழை பொழிவு இல்லாததாலும், கோடையின் தாக்கம் காரணமாகவும் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.

நீர்வரத்து குறைந்ததன் காரணமாக, மாநகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆத்தூர் அணையில் நீர்வரத்து சீராகும் வரை, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளைக்கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திண்டுக்கல் மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.