திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த முகம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமை நடத்தினர்.
மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அளிக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தார். இந்த சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.



