திண்டுக்கல் அருகே பொறியாளர் ஒருவர் விபத்தில் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குதிரையாறு ஆணை பகுதியில் கட்டிடப் பொறியாளராக கார்த்திக் (31) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் சென்றபோது காட்டுப்பன்றி இவரது வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



