• Tue. Jun 9th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Jun 8, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் கல்லூரி ஆசிரியர் களுக்கான திறன் மேம் பாட்டு நிகழ்வு இரு நாட்கள் நடைபெற்றன.

முதல் நாள் நிகழ்வின் தொடக்கமாகக் கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மை யத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் பால முருகன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரித் துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக.

மதுரை, மாணிக்கம் ராமயல் கல்லூரியின் உளவியல் சாமி கலை மற்றும் அறிவி துறை உதவிப் பேராசிரியர் சரோஜ் சங்கீதா கலந்து கொண்டு ஜென்-இசட் தலைமுறையை புரிந்து கொள்வது, வகுப்பறைக்கு அப்பாற்பட்ட உளவியல் எனும் தலைப்பில் தலைவர் குருசாமி நன்றி பேசினார். நிறைவாக வணிகவியல் துறை தலைவர் நன்றி கூறினார்

2-ம் நாள் நிகழ்ச்சியில்
தொடக்கமாகக் கல்லூரியின் முதுநிலை வணிகவியல் துறைத் தலைவர் அமுதா ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சென்னை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியின் வேதியியல் துறை,இணைப் பேராசிரியர் டி.அகஸ்டின் அருள் பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கற்பித்தல் அணுகுமுறைகளில் எனும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பொருண்மையில் பேசினார். நிறைவாகக் கணித வியல் துறைத் தலைவர் லலிதாம்பிகை நன்றி கூறினார். இதில் 138 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.