திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கோரிக்க வைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம் காரணமாக கடந்த 15 தினங்களாக மூடப்பட்டுள்ளது இந்நிலையில் பேரிஜம் ஏரி பகுதிக்கு வனத்துறை வாகனத்தில் சென்று வந்தது சுற்றுலாப் பயணிகளா? வனத்துறை
அதிகாரிகளின் உறவினர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அதிகாரி வர்க்கத்தினரை மற்றும் அனுமதிப்பது, அவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை தருவது ஏற்புடையது அல்ல.
எனவே தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



