• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் செய்தியாளர் தாக்குதல்..!

ByK Kaliraj

Apr 26, 2026

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறையினர் தடுக்க முயன்றும் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக அடையாளம் கண்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

“செய்தியாளரை தாக்குவது உண்மையை அடக்க முயற்சி” என்ற எதிரொலி சமூகத்தில் அதிகரித்து வருகிறது.