குமரி மாவட்டத்தில் காங்கிரஸ்_ திமுக., கூட்டணி கட்சியில் காங்கிரஸ் கட்சி 3_ தொகுதிகளிலும், திமுக 2_இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1
இடத்திலும் போட்டியிடும் சூழலில், திமுகவின் சார்பில், கன்னியாகுமரியில் மகேஷ், நாகர்கோவிலில் ஆஸ்ட்டின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில். கடந்த இரண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் மனோதங்கராஜ் தொடர்ந்து திமுக சார்பில் இந்த தேர்தலில் மனோதங்கராஜ் போட்டியிட்டும் நடக்கவிருக்கும் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காதது மட்டும் அல்லாது கடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களில் பத்மநாபபுரம் தொகுதியில் திமுக இடைவெளி இல்லாது வெற்றி பெற்ற தொகுதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கொடுத்தது திமுகவில், குறிப்பாக மேற்கு மாவட்ட திமுக-வின் செயலாளருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட திமுகவில் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சிகளான, இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலையில், நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்டத்தின் செயலாளர் செல்லசுவாமி பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி CPI-M வேட்பாளர் தோழர் ஆர்.செல்லசுவாமி




