மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திருமங்கலம் அருகில் உள்ள சின்னஉலகானி யை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் காரை சோதனை செய்ததில் 1,30,500/- ரூபாய் பணம் இருந்தது.

உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லப்பட்டதால் பறிமுதல் செய்து செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் படையினர் சாம் டேனியல் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் ஒப்படைத்தனர்.



